தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகம் (ONUR) என்பது பன்மைத்துவத்தை மதிக்கின்ற மக்களிடையே நல்லிணக்கத்தையும்இ ஒற்றுமையையும் மேம்படுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு கீழ் இயங்கும் ஓர் அமைப்பாகும். ஓவ்வொருவரும் அனைத்து சமூகங்களினதும் அடிப்படை உரிமைகள்இ சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை மதிக்கின்ற வகையில் அமைந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம். 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் திகதியின் அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் ஓனூர் ஸ்தாபிக்கப்பட்டது. 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதியின் 1945/41ம் இலக்க வர்த்தமானி அறிவி;த்தலின் பிரகாரம் தேசிய ஒருமைப்பாட்டுடன் தொடர்புடைய விடயங்கள் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழ் ஓனூரிடம் ஒப்படைக்கப்பட்டது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் திகிதியின் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஓனூர் நீதியமைச்சின் விடயப்பரப்பினுள் உள்வாங்கப்பட்டது.
பன்மைத்துவம் மற்றும் தேசிய அடையாளத்தினை மதிக்கின்ற அனைத்து இலங்கையர்களும் சமாதானமாகவும் ஒற்றமையுடனும் இணைந்து வாழ்வதற்கு அவசியமான பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அரசியல் உரிமைகளை சமமாக உறுதிப்படுத்தக்கூடிய வலுவான, நிலையான, முற்போக்கான, சமாதானத்தை விரும்பும் தேசத்தவர்களாக காணுதல்.
அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மற்றும் சட்டவாட்சி, சமத்துவம், பன்மைத்துவத்திற்கு மதிப்பளித்து இன, மத மொழி, கோத்திரம், பால்நிலை, பிறப்பிடம், அரசியல் பங்கேற்பு ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு பாரபட்சம் காட்டாது சகல பிரஜைகளையும் கௌரவத்துடன் மதிக்கின்ற ஓர் சமூகத்தைக் கட்டியெழுப்ப செயற்படுதல் மற்றும் அதற்காக ஒத்துழைத்தல்.
அனுர குமார திஸாநாயக்க
ஹர்ஷன நாணயக்கார
முனீர் முலாஃபர்
திருமதி ஆயிஷா ஜினசேன
பி.விஜித் ரோஹன் பெர்னாண்டோ
திரு. மகேசன்
ONUR கீழே குறிப்பிடப்பட்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் தேசிய நல்லிணக்க உபாயமார்க்கத்தினை நடைமுறைப்படுதும் முன்னணியான பணிகளை மேற்கொண்டுள்ளதோடு, நாடு முழுவதும் பரந்து வாழும் மக்களின் இதயங்களையும் வென்றுள்ளது. மேற்படி கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்கள் தமது ஒத்துழைப்பினை நல்கியுள்ளன.
Lorem ipsum dolor sit amet, conse ctetur.
Lorem ipsum dolor sit amet, conse ctetur.
Lorem ipsum dolor sit amet, conse ctetur.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit quisque.
3 February
மறுமலர்ச்சி யுகத்தின் சுதந்திரதின விழா- 2025. மனிதப் பிறவியை பெற்று பிறக்கும் மனிதனுக்கு மனிதத் தன்மையை உயர்ந்த மனிதநேயமாக வளர்த்துக்கொள்வதற்கு சுதந்திரம் இன்றி அமையாத காரணி ஆகின்றது. மானிட வரலாறு முழுதும் மனிதர்கள் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கு தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். […]
READ MORE24 January
தேசிய தை பொங்கல் விழா இந்த ஆண்டுக்கான தேசிய தைப் பொங்கல் விழா 18.01.2025 அன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ள ஸ்ரீ துர்கா தேவி கோவில் வளாகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கௌரவ அமைச்சர் டாக்டர் ஹினிதும சுனில் […]
READ MORE19 January
சமூகங்களுக்கிடையில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்காக வடக்கு மாகாணங்களில் சமூக-பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு கூட்டம் நடைபெற்றது. முதலீட்டாளர்கள், வர்த்தக மன்றம் மற்றும் தொடர்புடைய தரப்பினருடன் சந்திப்பது, சமூகங்களுக்கு இடையே நீடித்த அமைதியை அடைவதற்கு வட மாகாணங்களில் உள்ள சமூகப் […]
READ MORE